இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை
இந்த உலகத்தில் உம்மைப்போல யாருமில்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே
இயேசுவே .... இயேசுவே .... (2)
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
அதை கண்டவர் உம்மைக்கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினிரே
கடும் காற்றும் உம்மை கண்டு அடங்கியதே
இயேசுவே .... இயேசுவே .... (2)
லாசருவே நீ வா என்றதும்
அன்று மரித்தவன் உயிர்பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தாண்டிடும் நிச்சயமே
இயேசுவே .... இயேசுவே .... (2)
வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணியில் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே
இயேசுவே .... இயேசுவே .... (2)