Ummaithan Naan Paarkinren

உம்மைத் தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன் - 2

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒரு நாளும்
அவமானம் அடைவதில்லை – 2

கண்கள் நீதிமானை பார்க்கின்றன – உம்
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் – 2
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் – 2 - அவமானம் அடைவதில்லை

உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் – 2
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் - அவமானம் அடைவதில்லை

நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லை - அவமானம் அடைவதில்லை