Thanthanai Thuthipome Thirusabayorae

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையோரே கவி – பாடிப்பாடி

விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேகக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே நாமும்

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்

3. கத்தாங்கத்து நற்சபையேஇ - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்

4. தூரம் திரிந்த சீயோனேஇ - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்திலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டியாக்கினது என்னை