திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அவர்க்கு நிற்பவரும் நீரேயல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ (2)
1) என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ(2)
பேதைகளை மறப்பீரோ ஏழைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிறங்கும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு
2) கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும் (2)
தீமைகள் என்னை சூழூம் நேரம்
தீயவர் என்னை சூழூம் நேரம்
தூயவரே இரட்சியும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு
3) தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை (2)
ஏழையின் ஜெபம் கேளும் (2)
இயேசுவே மனமிறங்கும் (2)
- திக்கற்ற பிள்ளைகளுக்கு