Neerindri Vaalvethu Iraivaa

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் - நீரின்றி வாழ்வேது

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் (2)
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) - நீரின்றி வாழ்வேது

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் (2)
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) - நீரின்றி வாழ்வேது

எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா (2)
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஓர் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) - நீரின்றி வாழ்வேது