Nandri Solli Ummai Paadavanthom

நன்றி சொல்லி உம்மை பாடவந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்றவந்தோம் (2)

வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் (2)

நன்றி நன்றி சொல்வோம் உயிருள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை (2)

காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே (2)
- வார்த்தையினால் நீர் (2)
- நன்றி நன்றி (2)

உடன்படிக்கை செய்து நடத்திவந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக்கொண்டீர் (2)
- வார்த்தையினால் நீர் (2)
- நன்றி நன்றி (2)

கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருக்கின பாதையிலும் கூட வந்தீர் (2)
- வார்த்தையினால் நீர் (2)
- நன்றி நன்றி (2)

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே(2)
- வார்த்தையினால் நீர் (2)
- நன்றி நன்றி (2)