Nandri Endru Solluvom

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார் (2)

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்

நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா (2) - நன்றி என்று

உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா (2)
சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர் (2)
- நன்மைகளை நினைத்துக்

பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா (2)
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் (2)
- நன்மைகளை நினைத்துக்

வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரெ (2)
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால் (2)
- நன்மைகளை நினைத்துக்

பரலோகில் என்னையும் நீர் கொண்டு செல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர் (2)
நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார் (2)
- நன்மைகளை நினைத்துக்