Kuyavanae Kuyavanae Padaipin

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே (2)

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமெ (2)
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
- குயவனே குயவனே

மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே (2)
காணாமல்போன பாத்ரம் என்னை, தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
- குயவனே குயவனே