Karthavae Devargalil Umakoppanavar

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் – 2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் – 2

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களைப் போஷித்தீரே
உம்மைப்போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட – 2

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்தீடுவீர் – உமக்கொப்பானவர்