Endrum Anandham En

என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே – 2

1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
அல்லேலூயா ஆனந்தமே – 2
துதிப்பேன் துதிப்பேன் …..

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
அல்லேலூயா ஆனந்தமே – 2
துதிப்பேன் துதிப்பேன்

3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
அல்லேலூயா ஆனந்தமே – 2
துதிப்பேன் துதிப்பேன் …..