என் விண்ணப்பத்தைக் கேட்டீரைய்யா
என் கண்ணீரைக் கண்டீரைய்யா (2)
எனக்கு உதவி நீர் செய்தீரைய்யா
உன் பிள்ளையாய் நான் வாழ்ந்திட (2)
எல் உலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே
எல் உலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே (2)
வனாந்திரமான என் வாழ்க்கையை
நீருற்றாய் மாற்றின தேவன் நீரே (2)
எதிரிகள் வெள்ளம்போல் வந்தாலுமே
துணைநின்று ஜெயிக்கும் தேவன் நீரே (2)
- எல் உலாம்
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உன் கிருபை (2)
மரண இருளில் நான் நடந்தாலுமே
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் (2)
- எல் உலாம்
- என் விண்ணப்பத்தைக்