En Jeevan Neerthanae

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே

உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் - 2

1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே

2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே