ArulEralamai

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
இறங்கி தங்கிடுமேன்

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இசஷணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே